ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 15

குறுந்தொடர் - பகுதி 15

கரனுக்கு சுயம்பு மீது மகனென்ற பாசம் ஏனோ வரவில்லை.
“சுயம்பு, அப்படியே நீ எங்களுக்குப் பிறந்திருந்தாலும், அதெப்படி இன்னும் உயிரோடு இருக்க?”

“அப்பா, நீங்க ஒரு மருத்துவருக்கு மிக நெருக்கமான நண்பரா இருந்தீங்க, அப்போ, அவர் ஜீன் தெரபிங்குற மருத்துவ முறையால உங்களை சோதிக்க அனுமதிச்சீங்க. அவர் ஒவ்வொரு மனிதனையும் நீண்ட ஆயுள் வாழ வைக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிச்சார். கருப்பையில் கரு சுமக்காமலேயே குழந்தைகளை உருவாக்கவும், அதையும் ரூபாய் நோட்டு அச்சடிப்பது போல அரசே செய்யவும். மகனோ, அல்லது மகளோ தேவைப் பட்டால் விந்தணுக்களை மட்டும் இருவரும் கொடுத்தால் போதும். இப்படி ஒரு கண்டுபிடிப்பைத்தான் அவர் செய்து கொண்டிருந்தார். அதனோடு சேர்த்து ஜீன் தெரபியும் செய்தார். அம்மாவுக்கு கருப்பை பாதிக்கப் பட்டிருந்ததால குழந்தையை நீங்க அவரிடம் சொல்லி அவருடைய சோதனைக் கூடத்திலேயே உருவாக்கினீங்க. அப்படிப் பிறந்தவந்தான் நான். உங்களுக்கு மாறுபட்ட ஜீன்கள் இருந்ததால என்னோட ஆயுள் ரொம்ப அதிகமாயிடுச்சு. நீங்க உங்க 327 வது வயசுலதான் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிச்சீங்க. அதை இயக்குறதுக்கு நீங்க இருந்தாதான் முடியும். திடீருன்னு காணாம போயிட்டீங்க. அந்த இயந்திரமும் அங்க இல்ல.”

“அப்போ இந்த இயந்திரம் எப்படி வந்துச்சு?”

“அவசரப் படாதீங்க, ஒரு நாள் ஒரு இயந்திரத்துல நீங்க வந்தீங்க, வந்து என்னிடம் இதைக் கண்டு பிடிச்சுக் கொடுத்தீங்க. இப்போ இந்த இயந்திரத்தை வச்சுத்தான் நீங்க உங்களைக் காப்பாத்திக்கணும்”

“நான் என்னைக் காப்பாத்திக்கணுமா? என்ன சொல்ற?”

“ஆமாம். நீங்க இந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்கும்போதே இத வச்சு எதிர்காலத்துக்குப் போலாமே தவிர பிற்காலத்துக்குப் போக முடியாதபடிதான் செஞ்சிருந்தீங்க. ஆனால் அதை வச்சு பிற்காலத்துக்கும் போக முடியுங்குறதுதான் உண்மை. ஒரு மனுஷன் பிற்காலத்துக்குப் போறதுனால எதுவேணும்னாலும் மாறலாம், அதனால எதிர்காலத்துக்குப் போறது தப்பே இல்லைன்னு நீங்க அடிக்கடி என்கிட்ட சொல்லுவீங்க.”

“இப்போ நீ பிற்காலத்துக்குத்தானே வந்து என்னை இங்க கூட்டிகிட்டு வந்த? அதெப்படி முடிஞ்சுது?”

“நீங்க கேட்குறது சரிதான். உங்க கூட வேலை பார்த்த ஒருத்தர் உங்களோட கால இயந்திரத்தைத் திருடி எடுத்துகிட்டுப் போயிட்டாரு. அவர் எதிர்காலத்துக்கு எங்க போனாருன்னு தெரியல, ஆனா, உடனே பூமி மேல எதிர்பாராத விதமா சூரியனிலிருந்து பெரிய கதிர்வீச்சும், பாறைகளும் விழுந்துச்சு. அதுல இருந்து தப்பிச்சு வந்தீங்க. பிற்காலத்துக்குப் போகக் கூடிய ஒரு இயந்திரத்தை நீங்க யாருமே கண்டு பிடிக்க முடியாத ஒரு இடத்துக்கு அனுப்பி வச்சிருந்தீங்க, அது வந்து சேர்ந்த இடம் இதுதான். அங்க ஒரு ஆள் மட்டுமே போகக் கூடிய ஒரு சின்ன இயந்திரத்தையும் கண்டு பிடிச்சிருந்தீங்க. அந்த சின்ன இயந்த்துலதான் நீங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இங்க வந்தீங்க. கால இயந்திரக் கண்டு பிடிப்பாலத்தான் பூமிக்கு பெரிய கதிர்வீச்சும், அதனால சில பாறைகளும் வந்து விழுந்துச்சு. அதனால கடந்த காலத்துக்குப் போய் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்குறத தடுக்கணும்னு சொல்லி, கடந்த காலத்துக்குப் போகக் கூடிய இந்த இயந்திரத்தை என்கிட்ட கொடுத்தீங்க. அதற்கப்புறம் இறந்துட்டீங்க.”

“அப்போ, இங்க இருந்த பழைய காலத்துக்குப் போற இயந்திரத்தை வச்சுத்தான் நீ என்னைக் கூட்டிகிட்டு வந்திருக்க. சரி, அப்படியே என்னை எதிர்காலத்துல காப்பாத்தணும்னாலும் அதை நீயே செஞ்சிருக்கலாமே. என்னை கூட்டிகிட்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

“உங்களால மட்டும்தான் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்குற இடத்துக்குள்ள போக முடியும். நீங்க அந்தப் பழைய காலத்துக்குப் போய் உங்களோட இயந்திரக் கண்டுபிடிப்பைத் தடுக்கலைன்னா, எதிர்காலத்தின் விளைவு இப்படி ஆயிடும். நீங்க அந்தக் கண்டுபிடிப்பை அழிக்குறதுனால, நீங்க வந்த இந்த இயந்திரத்துக்கு எதுவும் ஆயிடாது.”

கேள்வியின் தொடக்கம் கண்ணில் மின்னியதும் உதடுகள் உதிர்த்தன சொற்களைக் பாலாவிடமிருந்து.
“செல்வினும், இன்னும் இரண்டு பேரும் இறந்துட்டாங்களே அவங்களை எப்படிக் காப்பபத்துறது?”

“நீங்க எல்லோரும் முதல்ல உங்க காலத்துக்குப் போகணும். சரியா விபத்து நடக்குறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நீங்க போகனும்”

கரன் கேள்வியோடு முந்தினான். “அப்போ நாங்க ரெண்டு ரெண்டா இருப்போமே?!”

“ஆமாம், நீங்க ரெண்டு ரெண்டு பேரா இருப்பீங்க. அப்பந்தான் செல்வினும், மற்ற நபர்களும் உயிரோடு இருப்பாங்க. இப்போ நீங்க அங்க இருந்து 2311 ம் ஆண்டுக்குப் போய் அந்தக் கால இயந்திரத்தை அழிச்சுட்டீங்கன்னா, சிமி நீங்க இருக்க இடத்திலிருந்து மறைஞ்சுடுவான். ஏன்னா, பூமிக்கு ஆபத்து ஏற்பட்ட பிறகு நான் தனியா இருந்தனாலதான் இவனை உருவாக்கினேன். அப்போ உங்க படகை யாரும் கவிழ்க்க மாட்டாங்க. நீங்க எல்லோரும் அங்கே தப்பிச்சுடலாம்”.

“அப்படியே இருந்தாலும் நிகழ்காலத்துலேயும் 2311ம் நாங்க இருப்போமே?”

“ஆமாம், நீங்க இப்போ பயணிக்குற இந்த இயந்திரத்துக்குள்ளே இருந்து இதையும் அழிச்சுட்டீங்கன்னா, நீங்களும், இந்த இயந்திரம் எந்த எந்த காலத்துல இருக்கோ எல்லா இடத்திலும் இந்த இயந்திரம் அழிஞ்சிடும்.” பாலா சலனமாகினான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்