ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 14

குறுந்தொடர் - பகுதி 14

சில வித்தியாசமான சத்தங்கள் எழும்பின, கால இயந்திரம் காலம் கடக்க எத்தனித்தது.

கடலில் வெகு நேரம் தேடியும் இறந்த உடல்களைத் தவிர வேறு யாரையும் கண்டு பிடிக்க முடியாது காப்பாற்ற வந்த படகு திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. கரை தொடும் தூரம் வரும்போது, திடீரென கடல் நீர் மட்டம் குறைந்து.

படகில் இருந்த காவலர் ஒருவர்
“கடல்த்தண்ணி உள்வாங்குதுப்போய், சுனாமி வரும்னு நினைக்குறேன். எல்லோரும் இறங்கி ஓடிடலாமா?”

அருகிலிருந்த மீனவர் ஒருவர்
“அப்பிடித்தான் நினைக்குறேனுங்க, ஆனால் இந்த இடம் கொஞ்சம் பாறையும் சேறுமா இருக்கும், இறங்கிப் போறது ரொம்ப கஷ்டம், அதுவுமில்லாம இறங்கிப் போகும் போது தண்ணி வந்துட்டாலும் கஷ்டம்”

பேசிக் கொண்டிருக்கும்போதே படகு தரை தட்டியது. திடீரென்று காவலர் கத்தினார்.
“அதோ பாருவே பெரிய அலை வருது, சுனாமின்னுதான் நினைக்கேன்”

“இல்ல எசமான், பயப்படாதீய, ஒண்ணும் ஆகாது”

வந்த அலை அப்படியே படகைத் தூக்கிக் கொண்டு கரையருகே சென்றது. கடலின் சீற்றமும் குறைந்து, கடல் உள்ளுக்கும் வெளியேவுமாக சற்று நேரத்தில் அடங்கிப் போனது. செல்வினின் தாயார் கடற்கரையில் கதறிக் கொண்டிருந்தார்.

மறுபுறம் முழுதும் ஒளியாய் இருந்த இடத்திலிருந்து மெல்லியதாய் ஒளி குறைய ஆரம்பித்தது. சுற்றிலும் முழு இருட்டு. கதவு பொறுமையாகத் திறந்தது. சிமி ஆர்வத்தோடு இறங்கினான்.
“வாங்கஎல்லோரும் வாங்க இதுதான் என் இடம்”

ஒரு கதவைத் திறந்து எல்லோரும் உள்ளே நுழைந்தனர். அறையிலிருந்து வந்த வெளிச்சம் ஜன்னல் வழியே வரும் காலை நேரத்து வெளிச்சமாய் படர்ந்தது கால இயந்திரத்தின் மேல்.

லதாவின் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் வெளியே கேட்டது!
“கரா இது என்ன இடம்?”

“என்னன்னு தெரியல, இது நிச்சயமா 4453ம் ஆண்டுதான்”

அங்குள்ள எந்தப் பொருளுமே பார்த்திராதப் பொருளாய் இருந்தது. அங்கிருந்த ஒரு அறைக்கு சிமி மூவரையும் அழைத்துச் சென்றான். மெல்லிய சத்தத்தோடு கதவு திறந்தது.

“இது என்ன இடம் சிமி? இதுதான் 4453ம் ஆண்டின் மிச்சம்னு எங்கப்பா சொல்லுவாரு”

“இதுதான் என் தந்தையினுடைய அறை, இதோ அவர் வர்றாரே!”

அடர்ந்த தாடியுடன் அதே முகம், இயந்திரத்தில் பார்த்த அதே முகம். கரனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“நீங்க ........தான் சுயம்புவா?”

“ஆமாம்ப்பா. நீங்க என்னை வா போன்னே கூப்பிடலாம்னு ஏற்கனவே சொன்னேனே”

“நீங்க என்னை விட வயசானவரா இருக்கீங்க, உங்களையெப்படி வா போன்னு கூப்பிடுறது?”

“எத்தனை வயசானாலும் நான் உங்க பையந்தானே! நீங்க என் அப்பாதான், இவங்க என் அம்மாதான்”

லதாவும், கரனும் திருமப்த் திரும்பப் பார்த்துக் கொண்டனர். “நீங்க என் பையனா?”

“ஆமாம் அப்பா. நீங்க மீண்டும் என்னிடம் வருவேன்னு சொன்னீங்க, அது உங்களுக்கு தெரியாது”

“என்னதான் நடந்துச்சுன்னு கொஞ்சம் விளக்குறீங்களா?“

“நிச்சயமா சொல்றேன். நீங்க இப்போ இருக்குறது 4453ம் ஆண்டில். இது நீங்க கண்டு பிடிச்ச கால இயந்திரம்தான். உங்களுக்கும், அம்மாவிற்கும் திருமணம் ஆனது 2010ல். 2311ல் சூரியனிலிருந்து பெரிய கதிர்வீச்சும், வெடித்துச் சிதறிய பாறைகளும் பூமியில் மோதின. அந்த சிக்கலில் மனிதர்களில் பல பேர் அழிந்தனர். எல்லா நாடுகளும் பொடிப் பொடியாச்சு. தொடர்ந்து இருந்து வந்த கதிவீச்சில் மிஞ்சியிருந்த பெண்களின் கருப்பை வெகுவாக பாதித்தது. தொடர்ந்து பிணங்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த ஆபத்திலிருந்து தப்பித்ததில் நானும், சிமியும் உண்டு. அந்த சம்பவத்திற்குப் பிறகு அம்மா, பாலா மாமா, சிநேகா அத்தை எல்லோருமே இறந்துட்டீங்க. அப்போ இந்த உலகத்துல மிச்சம் எத்தனை பேர் இருந்தாங்கன்னு தெரியல.”

பாலாவின் கண்களில் கேள்விக் குறிகளும், ஆச்சரியக் குறிகளும் தெரிந்தன.
“நீ எந்த சிநேகாவைச் சொல்ற?”

“உங்களோடு படிக்கும் சிநேகாவைத்தான் சொல்கிறேன். உங்களோட மனைவி”

“இதை நான் பொய்யாக்கிட்டா? இப்போ எனக்கு விசயம் தெரியுமே. நான் இனி அவளைத் திருமணம் செஞ்சுக்கலைன்னா?”

“எது வேண்டுமானாலும் நடக்கலாம்! இப்போ எதிர்காலம் உங்க மூணு பேர் கையில”

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்