ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 5

குறுந்தொடர் - பகுதி 5

வழக்கம்போல இல்லாதிருந்தது இந்த விடியல் கரனுக்கு. அவளிடம் என்ன சொல்ல? அவள் என்ன சொல்லுவாள்? அவளிடம் வேண்டாமென்று சொல்லி, அவள் புரிந்து கொள்வாளா? நாம் ஏன் காதலிக்கக் கூடாது? அப்பா, அம்மா இன்னும் பல பல சிந்தனைகள் அவன் மீது விழுந்து வழிந்து கொண்டிருந்தது குளியலறை தண்ணீர்த் தூறலோடு சேர்ந்து.

வழக்கமாக அரட்டை அடித்துக் கொண்டு போகும் கரனும், பாலாவும் மௌனமாகவே கல்லூரிக்கு கிளம்பினார்கள். வண்டியை நிதானத்தோடே ஓட்டினான். சட்டென்று வெகு வேகமாக மூன்று வண்டிகள் அவர்களைக் கடந்து சென்றது. அதில் இரண்டு வண்டியில் மூன்று மூன்று பேராக அமர்ந்திருந்தனர்.

“என்னடா இந்த வேகத்துல போரானுக, விட்டா போய்ச் சேர்ந்துருவானுக போலிருக்கு” என்றான் பாலா.

சற்று தூரம் கடந்து வந்த ஒரு வளைவருகில் கரனின் வாகனம் திரும்பியது. அங்கே முன்னே வேகமாக சென்ற மூன்றில் இரண்டு வாகனம் விழுந்து கிடந்தது. ஒரே ஒரு வாகனம் குருதி சொட்ட சொட்ட ஒருவனை நடுவில் வைத்துக் கொண்டு வேகமாக எதிரே பறந்தது.

“அய்யய்யோ, அடி பட்டிருச்சுடா இவனுகளுக்கு. இறங்கு என்ன ஆச்சுன்னு பார்ப்போம்” என்றான் கரன் மெதுவாக வண்டியை நிறுத்தி.

“படுபாவிகளா, சாவதுக்குத்தான் இம்புட்டு வேகமா போனானுகளா” என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த உடல்களில் உயிர் ஒட்டியிருக்குதாவென்று பார்க்கச் சென்றனர்.

மூன்று பேர் இரண்டு சடலங்களை மடியில் போட்டுக் கொண்டு அழுதுகொண்டே இருந்தனர். அதுல ஒருத்தன் அவனுகள சும்மா விடக்கூடாதுடா, நம்ம பசங்களுக்குப் போன் பண்ணுடா என்று அலறினான்.

சற்று தூரத்தில் ஒரு வாகனத்தில் இரண்டு பேர் வேகமாக கல்லூரியைத் தாண்டி சென்று கொண்டிருந்தனர்.

“டேய், இது வேற ஏதோ பிரச்சினை மாதிரி இருக்குடா, வாடா போயிடலாம்” என்றான் பாலா பதறியபடியே.

“ஆமாம்டா, என்ன பன்றதுன்னே புரியல, வா போய்டலாம்” கரன்.

கல்லூரி அருகே பெரிய கலவரம் நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். எதிரே வந்த பாலாவின் நண்பன் “மச்சான், இந்த வண்டிய எங்க வீட்டுல விட்டுடா, நான் நம்ம பசங்க வேன்ல போலீஸ் ஸ்டேஷன் போறேன்டா” என்றான் பதட்டமாக.

வேறெதுவும் பேச முடியாத அவசர நிலை பாலாவிற்குப் புரிந்தது. வண்டியை வாங்கிக் கொண்டான். சற்று தொலைவில் லதா வேகமாக ஓடிவந்தாள், கரனைப் பார்த்ததும் அழுகை பீரிட்டு வந்தது அவளுக்கு. இன்னும் வேகமாக ஓடிவந்தாள்.

“கரா வண்டியை எடு, என்னை காப்பாத்து, எங்கேயாவது போ” என்றாள் பதட்டமாக. கரனுக்கு கையும் ஒடவில்லை, காலும் ஓடவில்லை.

“கரா சொல்றத கேளு அங்க இரண்டு பேரு என்னைத் துரத்துறாங்க, சீக்கிரம் போடா, என்னைக் காப்பாத்து” என்று கதறினாள். தூரத்தில் இரண்டு பேர் ஒரு சின்ன வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

“டேய் வாடா போயிடலாம். நீ கரன் வண்டியில ஏறு” பாலா.

இரண்டு வண்டியும் சீறத் தொடங்கின. “டேய் பக்கத்து ஊருக்குப் போயிடலாம் குறுக்குப் பாதை வழியா, இல்லைனா அவனுங்க ஆளு யாராவது எதிர்க்க வரப் போறாங்க” என்றான் கரன். இதயம் பல மடங்கு துடிக்கத் தொடங்கியது கரனுக்கும் பாலாவிற்கும்.

மூவரும் சற்று நேரத்தில் மறைந்தனர். பின்னால் துரத்தி வந்தவர்களால் அவர்களைத் தொடர முடியாமல் திரும்பி விட்டனர்.

கொஞ்ச தூரம் போனதும் பாலா கரனை வண்டியை கடல்புறமாக ஓட்டச் சொன்னான்.

அங்கே சென்று வண்டியை நிறுத்தினான் கரன்.

படபடப்போடு இறங்கினர் மூவரும். ஒருவரையொருவர் மூச்சிளைக்க பார்த்துக் கொண்டனர்.

“என்ன ஆச்சு, அங்க என்னதான் நடக்குது?” கரன்

“எனக்கு பயமா இருக்கு கரா, என்னென்னமோ நடக்குது” என்று அழத் தொடங்கினாள், கொஞ்சமாக கரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு.

எதுவுமே புரியாதவனாய் கரன் பார்த்துக் கொண்டிருக்க, பாலா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி அழாத, முதல்ல விசயத்தை சொல்லு, என்னதான் நடக்குதுன்னு கேக்குறன்ல” என்றான் கொஞ்சம் சத்தமாக கரன்.

கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது லதாவிற்கு. பாலா பார்வையிலேயே கரனை சமாதானப் படுத்தினான். கரன் மெல்லிதாய் அவள் கை மேல் கை வைத்தான், லேசாகத் தட்டிக் கொடுத்தான். லதா படாரென்று கரன் மார்போடு சேர்ந்து கொண்டு அழுதாள்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

3 comments:

கோவை விஜய் August 6, 2008 at 9:24 PM  

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

கோவை விஜய் August 7, 2008 at 4:25 PM  

இருவருக்கான இரு சக்கர வாகனத்தில்
மூவர்
காலன் அழக்காமல் வருகிறான்

ஒளியவன் August 7, 2008 at 4:27 PM  

நன்றி திரு. கோவை விஜய், பின்னூட்டத்திற்கு. உண்மைதான் இருவர் அமரும் வாகனத்தில் மூவர் சென்றது.

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்