ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 13

குறுந்தொடர் - பகுதி 13

புத்தகத்தின் இறுதி வரியைப் படித்த கரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவனுக்கு இந்த இடத்தை விட்டுச் சீக்கிரம் தப்பிப்பதே நல்லதென பட்டது.

"பாலா இதையெல்லாம் வாசிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு பைத்தியமே பிடிட்ச்சுடும் போல இருக்கு. முதல்ல இங்கே இருந்து கிளம்பிடலாம்."

"கரா திரும்பத் திரும்ப தப்பு பன்ற. இங்க இருந்து எப்படித் தப்பிப்ப? உனக்கு நீ மட்டும் தப்பிச்சாப் போதுமா? செல்வின் உயிரெல்லாம் என்ன ஆகுறது? நாம அவனைக் காப்பாற்றியே ஆகணும். இல்லைன்னா நீ தப்பிச்சாலும் லதா கண்டிப்பா அந்தக் கொலைகாரங்ககிட்ட மாட்டித்தான் ஆகணும்"

"இப்ப என்னதான் செய்யச் சொல்ற? நம்ம யாருக்கும் இதைப் பற்றி ஒண்ணுமே தெரியாது. என்ன பண்ண முடியும்னு நினைக்குற?"

"சுயம்புகிட்ட பேசுவோம். எங்களை கொலை நடந்த அன்னைக்குக் காலையில கொண்டு போய் விட்டுடச் சொல்லுவோம். அன்னைக்கு நாம எங்கேயும் போகாம, மூன்று பேரும் வீட்டிலேயே இருந்துப்போம்."

"என்னடா சொல்ற? நாம இப்போ பழைய காலத்துக்குப் போனா, அங்க எல்லோரும் இரண்டு இரண்டு பேராதானே இருப்போம்? அப்போ என்ன பண்ணுவ?"

"நீ சொல்றதும் சரிதான். ஆனா செல்வினும் மத்தவங்களும் இப்போ உயிரோட இல்லை. அவங்களைக் காப்பாற்றி பழைய காலத்துல இருந்து இதுல கூட்டிகிட்டு வந்துட்டா?"

"இல்லை, இது எல்லாம் நம்ம கற்பனைதான், உண்மை என்னன்னு நமக்குத் தெரியாது. இதனால பல பிரச்சினை வரலாம். எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம். இறந்தவங்களை உயிரோடக் கொண்டு வருவது எல்லாம் சரிபட்டு வராது."

"அந்த புத்தகத்துல நீ மீண்டும் வருவேன்னு எழுதியிருக்க, அப்படின்னா ..........."

பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு ஒலி கேட்டது. இயந்திரம் முழுமையாக இயங்க ஆரம்பித்து விட்டது போலிருந்தது.

சத்தம் கேட்ட்தும் எல்லோரும் சிமி இருக்கும் இடத்திற்கு விரைந்தனர். அங்கே சிமி தன் தந்தை சுயம்புவிடம் பேசிக் கொண்டிருந்தான். சுயம்பு சொல்லச் சொல்ல ஒரு தலைக்கவசம் போன்ற ஒன்றைத் தலையில் மாட்டிக் கொண்டு அவர் சொல்வதைச் செய்து கொண்டிருந்தான்.

"டேய் கரா, என்னடா நடக்குது?"

"இது சுயம்புவோட குரலாத்தான் இருக்கணும், சிமியை சரி பண்ணுறாருன்னு நினைக்குறேன்."

சற்று நேரத்தில் சரியான சிமி, கரனின் அருகே வந்தான்.
"எனக்கு இப்படித்தான் அடிக்கடி நேரும். வாங்க என் தந்தையிடம் பேசுங்க"

ஒளிக்கற்றையாலேயே திரை போல் காட்சியளிக்கும் அந்த இடத்திற்கு சென்றார்கள். கரன் அங்கே வந்த குரலுக்கு சொந்தக் காரனின் முகம் பார்த்தான். தாடிக்குள் மூடி வைக்கப் பட்ட அந்த முகத்தை உற்று நோக்கினான் கரன்.
"நீங்க தான் சுயம்புவா?"

"ஆமாம், நாந்தான் சுயம்பு. நீங்க என்னை வா போ என்றே கூப்பிடலாம்"

"எனக்கு இதைப் பற்றித் தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இல்லை, எங்களை எங்கள் ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து விடு"

"நீங்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும். அதன் பிறகு உங்களை நானே அனுப்பி வைக்கிறேன்"

"நான் வரமாட்டேன். எனக்கு இங்கே வந்ததிலிருந்தே ஏதோ மாதிரி இருக்கு. உடனடியா எங்களை அனுப்பி வைங்க"

"உங்களை அனுப்பி வைப்பதில் எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை, ஆனால் எனக்கு தந்த உத்தரவை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும். அதனால் நீங்கள் மூவரும் என்னுடன் சிறிது நாட்கள் இருந்துவிட்டு பின்னர் போகலாம்"

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பாலா குறுக்கிட்டான்.
"இங்கு என்ன நடக்குதுன்னே புரியல. என்னோட நண்பன் செல்வின் உங்களோட சிமியால இறந்துட்டான், கூடவே இங்கு வந்த இருவரும். முதலில் அவர்களைக் காப்பாற்றி விட்டு எங்கு வேண்டுமானாலும் வருகிறோம்"

"எனது சிமியால் ஏற்பட்ட இழப்பிற்கு நான் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும், அவர்களைக் காப்பாற்றுவதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால் அது என்னால் இயலாத காரியம். நீங்கள் இங்கே வந்தால் எல்லாம் கை கூடும்"

மழை பெய்து ஓய்ந்த மௌனத்தை ஒத்திருந்த்து அந்த இடம். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். லதாவிற்கு சொல்ல எதுவுமில்லை. கரன் பாலாவின் கேள்வி நியாமென நினைத்தான், ஆனால் ஏனோ சுயம்பு பேச்சைக் கேட்க அவன் விரும்பவில்லை. பாலாவிற்கோ செல்வினைக் காப்பாற்றுவதும், மேலும் இந்த அதிசயத்தை உணரவேண்டுமென்பதே பெரியதாகப் பட்டது. கரன் பேசலானான்.
"சுயம்பு, எங்களோட உயிருக்கு நீங்க உத்திரவாதம் தருவதா இருந்தா, நாங்க உங்க இடத்துக்கு வர்றோம்."

"மெல்லிய புன்னகை செய்தான் சுயம்பு!"

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்