ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 12

குறுந்தொடர் - பகுதி 12

கால இயந்திரத்தில் இருக்கிறோம் என்று தெரிந்த பின்னர் மூவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றியது. இது வரை கால இயந்திரம் சம்பந்தப் பட்டப் படங்கள் மனதுக்குள் எல்லோருக்கும் ஓடியது உண்மை.

லதாவிற்கு எது எப்படியோ ஆனால் இதை விட்டு வெளியேறி விடுவோம் என்றுத் தோன்றியது, கரனுக்கோ இது எப்படி சாத்தியமானது என்று தோன்றியது, பாலாவிற்கோ வேறு எண்ணம்.

“கரா இப்போ என்ன செய்யப் போறோம்?”

“இதை இங்கே இருந்து அதன் வீட்டுக்கே அனுப்பிவிட்டால், நாம் இங்கிருந்து தப்பித்து விடலாம்”

“எப்படிப் போவ? நம்மள தேடி வந்தவங்களும் நாம கிடைக்கலைன்னு திரும்பிப் போயிருப்பாங்க, இதை எப்படி அனுப்பி வைத்து விட்டு இங்கே இருந்து தப்பிப்ப?”

“வேற என்னதான் செய்ய முடியும்?”

“எனக்கொரு யோசனை இருக்கு, சொல்றேன் கேப்பீங்களா?”

எப்பொழுதுமே விளையாட்டுத்தனாமாய் இருக்கும் பாலாவிடம் லதாவிற்கு நம்பிக்கையில்லாமலேயே இருந்தது.
“நாம வீட்டுக்குப் போனால் போதும் பாலா, வேறெதுவும் குழப்பாம இருந்தா அதுவே போதும்”

“பயப்படாத லதா, இந்த இயந்திரத்தை வச்சு நாம நம்ம வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்து விட முடியும், நீ அந்தக் கொலையை பார்க்காமல் இருக்க வைக்க முடியும், ஏன் அந்தக் கொலையையே தடுக்க முடியும், செல்வினைக் காப்பாறியிருக்க முடியும், இன்னும் என்ன வேணும்னா. இது நமக்கு கிடைச்ச புதையல். இதை விட்டுக் கொடுக்கக் கூடாது”

இவன் இறுதியில் என்ன சொல்ல வருகிறான் என்பது கரனுக்கு நன்றாகவே புரிந்தது.
“இதோ பார் பாலா, நீ எல்லா விசயத்தைப் போல இதுலையும் விளையாடாத, இதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, எங்கேயாவது போய் மாட்டிகிட்டா பெரிய பிரச்சினையாயிடும்”

“இந்த விளையாட்டல்லாம் சரி பட்டு வராது பாலா”

“நல்லா சிந்திச்சுப் பாரு. உன்கிட்டப் பேசி இந்த சிமியை அவர் ஊருக்கு அனுப்பி வைக்க சொன்ன சுயம்பு, சிமிகிட்ட பேசி அங்கே வரசொல்லி இருக்கலாமே”

“அதுதான் எனக்கும் புரியல. நான் நினைக்குறேன், சிமியைத் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இங்கே இணைப்பு துண்டிக்கப் பட்டிருக்கலாம். நாம அதை சரி செய்தா போதும்னு நினைக்குறேன்”

“கரா, நீ இதையும் புரிஞ்சுக்கணும், நமக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது”

“இல்லை இதைப் பற்றியும் சுயம்பு சொன்னாரு, இங்கே இருக்குற ஒரு சிவப்பு பெட்டியில இருக்க ஒரு வித ஸ்விட்ச் C என்ற கணினி மொழியிலதான் எழுதியிருக்காங்க. அதுல என்ன பிரச்சினை இருக்கும்னு அவர் சொன்னாரு, அதை சரி செஞ்சுட்டா போதும்”

“அய்யய்யோ எனக்கு அதெல்லாம் வராது கரா. படிப்புன்னா நீ பாத்துக்கோ, பொண்ணுங்கன்னா நான் பார்த்துக்குறேன்”

“இங்கேயே இருங்க நான் அதைத் தேடுறேன். நீங்களும் தேடுங்க, அது ஒரு சிவப்புப் பெட்டி”

“சரிடா கரா, நானும் லதாவும் இடது பக்கம் தேடுறோம், நீ வலது பக்கம் போ”

“ஏன்? நானும் லதாவும் போகக்கூடாதா?”

“போடா போடா, நீயே எவ்வளவு நேரம்தான் கடலை போடுவ? நானும் கொஞ்ச நேரம் கடலை போடறேனே. இது உன் ஆளுதான், கடிச்சு முழுங்கிட மாட்டேன். போடா போடா வேலையைப் பாரு.”

லதா சிரித்து விட்டாள். கரனும் அதைத் தேடச் சென்று விட்டான். ஒரு வழியாக கீழ் அறையில் இருந்த அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்துவிட்ட கரன், அதை சரி செய்ய ஆரம்பித்தான். இதையெதையும் கண்டுகொள்ளாமல் சிமி தனக்குத் தெரிந்ததை செய்து கொண்டிருந்தான்.

லதாவும் பாலாவும் தேடிச் சென்ற இடத்தில் ஒரு படத்தில் லதாவும் கரனும் ஒன்றாய்க் கட்டிப் பிடித்து நிற்பது போல இருந்தது. ஆச்சரியம் கண்களைக் கட்டிக் கொள்ள, அருகே கரன் கையெழுத்தில் ஒரு புத்தகமும் இருந்தது. இருவரும் அதை எடுத்துக் கொண்டு கரனைத் தேடிச் சென்றனர்.

“கரா, இங்க பாரு நீங்க இரண்டு பேரும் நிக்குறா மாதிரி ஒரு படம் இருக்கு.”

ஒரு நிமிடம் இரு என்று கூறி விட்டு தனது வேலையை முடித்து விட்டு, இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் இந்த பிரச்சினை சரியாயிடும் என சொல்லிக் கொண்டான்.

புத்தகத்தின் இறுதிப் பக்கத்தைப் புரட்டினால் அதில் ஒன்று எழுதியிருந்தது!

“நான் மீண்டும் வருவேன்!”

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்