ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 11

குறுந்தொடர் - பகுதி 11

"நீ யார்? எங்க இருந்து வந்த?"

"நான் ஒரு மனிதன்னு எங்க அப்பா சொல்லுவாரு. நான் ஒரு குழாயில இருந்து பிறந்தவன். ஆனால் எங்க ஊர்ல உங்களை மாதிரி யாருமில்லை, நாங்க மொத்தம் 2 பேருதான் இருக்கோம்"

"உனக்குத் தமிழ் தெரியுதே! எந்த ஊர் உங்க ஊர்?"

"எனக்கு இன்னும் 11 மொழிகள் தெரியும். இந்த இடம்தான் எங்க ஊர். ஒரு இயந்திரத்துல ஏறினேன், ஆனால் திடீருன்னு தண்ணீர் வந்துடுச்சு"

"இது உன் ஊரா? திடீருன்னு தண்ணீர் வந்துடுச்சா? சரி சுயம்பு உனக்கெப்படி தெரியும்?"

"சுயம்புதான் என்னை உருவாக்கினார், அவர்தான் என் அப்பா! நீங்கள்லாம் யாரு? ஏன் இவ்வளவு தண்ணி வந்துச்சு? ஆனால் எனக்கு உங்களைத் தெரியும், உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்"

பாலா குறுக்கிட்டான்.
"சிமி, நீ வந்த இயந்திரம் எங்க இருக்கு? எங்களுக்கு காட்டு"

"இருங்க, இங்கேயே வரும்"
சொல்லி முடித்துவிட்டு கையிலிருந்த ஒரு பொத்தானை அழுத்தினான் சிமி. கடல் கொஞ்சம் கொஞ்சமாக கொப்பளிக்க ஆரம்பித்தது. அந்த அதிர்வில் லதா விழித்துக் கொண்டாள். அலறினாள்...
"கரா, இதுதான், இதுதான் என்னை கொல்லப் பார்த்தது."

"லதா அமைதியா இரு, இது நம்மள கொல்ல வரல. பயப்படாத"

சிமி திடுக்கிட்டான், கொஞ்சம் கோபமாக பார்த்தான். சட்டென முகம் மாறியது
"இவங்க, இவங்களையும் நான் பார்த்திருக்கேன்"

"என்ன சொல்ற சிமி, இவளையும் பார்த்திருக்கியா? எங்க பார்த்த"

அதற்குள் மேலே எழுந்து வந்த ஒரு சாய்வு பட்டு படகு கவிழ்ந்தது. அதில் இருந்த அனைவரையும் சிமி, கடலிலிருந்து வெளியே வந்த அந்த இயந்திரத்திற்கு கூட்டிச் சென்றது.

உள்ளே எங்கெங்கும் வெள்ளை ஒளியால் நிரப்பப் பட்டிருந்தது. அது சட்டென தனது கதவுளைப் பூட்டிக் கொண்டு ஆழத்திற்கு விரைந்து சென்றது.

பாலா ஒருவித படபடப்புடன் சிமியிடம் பேசினான்.
"நாங்க வந்த படகை இடித்தது நீதானா? உன்னால எத்தனை பேரு செத்தாங்கன்னு உனக்குத் தெரியுமா?"

சற்றே கோபமடைந்தான் சிமி.
"என்னிடத்தில் நீங்க என்ன பன்றீங்க, என்னைக் கொல்லதானே வந்தீங்க? அதனாலதான் நானே முந்திகிட்டேன்."

பாலாவைக் கண்ணைக் காட்டி சமாதானப் படுத்தினான் கரன்.
"சிமி, எங்களையேன் கொல்லவில்லை?"

"அதான் சொன்னே உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு!"

"உன்னை இங்கேயிருந்து உன் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்"

"இதுதானே என் ஊர், நான் அப்பாவைத்தான் தேடிட்டு இருக்கேன்"

"இது இல்லை உன் ஊர், நீ வேறு இடத்திலிருந்து இங்கே வந்துட்ட"

"இல்லை, நான் இதுக்குள்ள ஏறி உட்கார்ந்து தூங்கிட்டேன். முழிச்சுப் பார்த்தால் இங்கே நிறைய தண்ணீர்"

சிமியுடன் பேசிக் கொண்டிருந்த கரனைத் தடுத்தான் பாலா.
"என்ன சொல்ற? இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் கரா?"

"அன்னைக்கு நீ தூங்கிட்டதுக்கு அப்புறம் சுயம்பு என்னிடம் பேசினார். அவர் சொன்னது இதுதான். கடலில் கண்ட உயிரனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டுமாம்"

பாலா எப்பொழுதுமே கரன் பேச நினைப்பதை அவன் கண்கள் வழியாகவே வாசித்துவிடுவான். அவன் சொன்னதில் உண்மையில்லை என்பதை அறிந்த பாலா, கரனைத் தனியாக கூப்பிட்டுப் பேசினான்.

"டேய், உண்மைய சொல்லு, அவரு என்ன சொன்னாரு?"

"பாலா, நாம இங்க இருந்து சீக்கிரமா போகணும்னா, நான் சொல்றதைக் கேளு. சிமியை இங்க இருந்து அனுப்பி வச்சிடலாம். சிமிக்கு தற்காலிகமா கொஞ்ச நினைவுகள் அழிஞ்சு போச்சாம். உண்மைய சொன்னா சிமியை சுயம்பு அனுப்பினதே என்னையும், உன்னையும், லதாவையும் அங்கே கூட்டிகிட்டுப் போகத்தான்"

"என்னடா சொல்ற? எங்க கூட்டிகிட்டுப் போகணும்?"

"டேய், பாலா. நான் சுயம்பு சொல்லும்போதெல்லாம் நம்பலை. ஆனா இங்க வந்த உடந்தான் தெரியுது, அவர் சொன்னது உண்மைன்னு. நாம இப்போ நிக்குறது ஒரு கால இயந்திரத்துல! இந்த இயந்திரம் 4453 ம் ஆண்டில் இருந்து வந்திருக்கிறது!"

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்