ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 10

குறுந்தொடர் - பகுதி 10

கரன் வேகமாகத் உள்ளே இறங்கினான், பாலாவும் கரனும் அந்தப் பாய்மரப் படகை விடுவித்தனர்.

"கரா லதா எங்கே?"

"பாலா, அங்கே தெரியுது அந்தத் தக்கை!"
சற்று தூரத்தில் அந்தத் தக்கை மிதப்பது தெரிந்தது.

வெகு வேகமாக அந்த இடத்தை அடைந்தான் கரன், பாலாவும் அந்த இடத்திற்குச் சென்றான். ஆனால் அங்கே லதா இல்லை, வெறும் தக்கை மட்டுமே மிதந்து கொண்டிருந்தது.

கரனும், பாலாவும் உள்ளே மூழ்கித் தேடினர், லதாவைக் காணவில்லை.

"கரா, அங்கே தெரியுறது லதாதான்னு நினைக்கிறேன், வாடா"
பாலாவும் கரனும் விரைந்தனர்.

"லதா, லதா என்னைப் பாரு, என்னைப் பாரு" கரன் கதறிக் கொண்டிருந்தான்.

பாய்மரப் படகில் ஏற்றிவைத்தான் பாலா. அசைவின்றிக் கிடந்தாள் லதா.

"கரா, அவ தண்ணியக் குடிச்சுட்டான்னு நினைக்குறேன், அவ வயித்த அழுத்து"

கரன் அவள் வயிற்றை அழுத்தினான், சிறிது சிறிதாக அவள் தண்ணீரைத் துப்பினாள். உள்ளங்கையை சூடுபறக்கத் தடவினான்.
"லதா, லதா என்னைப் பாரு, லதா, லதா"

மெல்ல மெல்ல கண்விழித்தாள் லதா, சுற்றி என்ன நடக்கிறதென்பதே புரியாதவளாய் திகைத்தாள். அவளுக்குத் தெரிவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கரன் தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். காலை யாரோ தேய்த்து விடுவது போலிருந்தது. அது பாலாதான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

"லதா உனக்கெதுவும் ஆகல, என்னைப் பாரு, என்னைப் பாரு"

முழுதாய் கண் திறந்தவள், கரனை கட்டிப் பிடித்து அழுதாள்.
"அ........து அ........து, எனக்குப் பயமா இருக்குக் கரா, எனக்கு பயமா இருக்கு"

"லதா என்னைப் பாரு, என்னது அது? எதுக்கு கீழ விழுந்த? என்ன ஆச்சு?"

"அது, அது வந்து, அது என்னதுன்னு தெரியலை, என்னை கீழே தள்ளிவிட்டுடுச்சு. அது வந்துடும்னு நினைக்குறேன், எனக்குப் பயமா இருக்கு"

"எதுவும் ஆகாது, தைரியமா இரு லதா, நானும் கரனும் இருக்கோம்ல, உனக்கெதுவும் ஆகாது"

படகிருந்த தடமென்று எதுவுமே இன்றி வெகு அமைதியாக இருந்தது கடல். இருட்டி விட இன்னும் கொஞ்ச நேரமே பாக்கி இருந்தது.
"கரையிலிருந்து காப்பாற்ற ஆட்கள் வந்தாலும் எப்படியும் 2 மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பொறுத்திரு லதா" பாலா.

"எனக்கென்னமோ, படகை ஓட்டைப் போட்டதே அதுதான்னு தோணுது, இல்லைன்னா இந்தக் கடல்ல படகு ஏன் கவிழணும்? அது திரும்பவும் எப்போ வேணும்னாலும் வரும் பாலா"

"அதெல்லாம் வராது பயப்படாத லதா"

"பாலா, பாலா பின்னாடி..."
வேகமாக தண்ணீரைக் கீறியபடி வந்தது ஏதோ ஒன்று, பாயமரப் படகை வேகமாக தள்ளிய படி, நீண்ட தூரத்திற்குப் போனது.

"கரா தண்ணியில குதிச்சுடாத, தைரியமா இரு"

"பாலா நீ விழுந்துடாத கெட்டியமா புடிச்சுக்கோ"

லதா மயங்கி விழுந்தாள். கரன் அவளைப் பிடித்துக் கொண்டான்.

சட்டென அந்த உருவம் தள்ளுவதை நிறுத்தி விட்டு, படகு மேலே தவ்வியது! அது மனிதன்தான், கொஞ்சம் பெரிய உருவம்.

"பாலா அசையாமல் இரு, அப்படியே இரு"

கரன் இப்படிச் சொன்னதும் அந்த உருவம் கரனை நோக்கித் திரும்பியது. கரனை உற்றுப் பார்த்தது.

"உனக்கு என்ன வேண்டும்? எங்களை எதுவும் பன்னிடாத, சுயம்பு உன்னைப் பற்றிச் சொல்லி இருக்காரு. உனக்கு என்ன வேண்டும்?"

கரனை இன்னும் அருகே வந்து உற்றுப் பார்த்தது. பாலா அதை அடிப்பதற்கு வேகமாக எழுந்தான்.

"பாலா வேண்டாம், இரு இரு, நான் பேசுறேன்"
சட்டென திரும்பிய உருவத்தை திசை திருப்பினான் கரன்.
"உன்னை உங்க ஊருக்கு நான் திருப்பி அனுப்புறேன், சொல்லு எங்க வச்சிருக்க? என்னை அங்க கூட்டிகிட்டுப் போ!"

"என் பெயர் சிமி" என்றது அந்த உருவம்!

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்