ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 4

குறுந்தொடர் - பகுதி 4

“இவ்வளவு நேரம் சிநேகாதான் பேசினா. என்னைப் பற்றி நீ என்ன நினைக்குறன்னு தெரிஞ்சுக்கதான் அவ பேசினா. நீ இப்படிப் பேசுவேன்னு நான் எதிர்பார்க்கலை.” என்றாள்.

பதட்டத்துடன் வேகமாக தட்டச்சினான் கரன். “ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சு, இவ்வளவு நேரம் இங்கே பேசினது நானில்லை, பாலா. உன்னைக் கிண்டல் செய்யுறதா நினைச்சு அப்படிப் பேசிட்டான்.” என்றான்.

சற்றுத் தாமதமாகவே பதில் வந்தது. “அப்போ அது நீ இல்லையா? சிநேகாவதான் பிடிச்சுருக்குன்னு சொன்னதும் பயந்துட்டேன்” என்றாள்.

எதற்கான பீடிகை இதுன்னு கரனுக்கும் பாலாவுக்கும் புரிந்தது. பாலா குறுக்கிட்டான்.

“நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி பேசினேன், சிநேகாவை தவறாக எடுத்துக்க வேணாம்னு சொல்லு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்” என்று இணைப்பைத் துண்டித்தான்.

அதற்கு அவள் அனுப்பிய பதிலுக்கு பதிலும் அனுப்பாமல் நிறுத்தி விட்டான். திடீரென்று தெருவில் பரபரப்பு.

சன்னலின் வழியே எட்டிப் பார்த்த பாலா கீழ் வீட்டில் தங்கி இருக்கும் முத்துவைப் பார்த்து கேட்டான் “என்ன விசயம் திடீருன்னு எல்லோரும் கூட்டமா நிக்குறீங்க?”

“கடல்ல இன்னைக்கும் ஒருத்தர் அந்த மனிதன் மாதிரி இருக்க மீனைப் பார்த்திருக்காரு, ஆனால் அது உடனே மறைஞ்சுடுச்சாம்” என்றார்.

பாலா சலித்துக் கொண்டே, “இவனுக உண்மையைத்தான் பேசுறானுகளா?” என்று கேட்டுக் கொண்டே கரனிடம் சென்றான். கரனுக்கு மீண்டும் சுயம்பு ஒரு விசயம் அனுப்பி இருந்தான்.

அதில், அந்தக் கடலுக்கு கரன் செல்ல வேண்டுமென்றும், கடலில் இருப்பது மீனல்ல தனக்குத் தெரிந்த உயிர்தான் என்றும் எழுதியிருந்தது.

இதனை வாசித்த கரன் அதிர்ச்சியில் மூழ்கியிருக்க, பாலா “டேய், யாருடா இது? என்னென்னவோ பேசுறான்? என்ன செய்யலாம்” என்று மௌனமுடைத்தான்.

என்னதான் சொல்றான்னு கேட்கலாம்டா என்றான் கரன். பாலாவும் சம்மதித்தான்.

“நீங்கள் யார்? எதற்கு உங்களுக்கு உதவ வேண்டும், இதனால் என்ன பயன்?” என்றான் கரன் சுயம்புவிடம்

பதில் உடனே வந்தது. “நான் யாரென்பதை உங்களுக்கு விளக்கும் நேரம் வரவில்லை. ஆனால் நீங்கள் உதவியைச் செய்தால் மனித இனம் தழைக்கும்” என்றான் சுயம்பு.

மேலும் ஒரு புதிரான விசயத்தைச் சொன்னான் சுயம்பு. “நீங்களும், உங்கள் மனைவி லதாவையும் சேர்ந்துதான் அந்த உதவியைச் செய்ய வேண்டும்” என்று இருந்தது.

மனைவி லதா என்பதைப் படித்தவுடன் அதிர்ச்சியுற்ற இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

கரன் பேச ஆரம்பித்தான் “நீங்க தட்டச்சுறதுக்குப் பதிலா என்னுடன் பேசுங்க, இல்லை நேரில் வாங்க” என்றான்.

அதற்கு சுயம்பு “நான் உங்களைப் பார்க்க வர முடியாது, ஆனால் நிச்சயம் நாம் சந்திப்போம், எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் பன்னுங்க” என்றான்.

“உங்களுக்கெப்படி இங்கு நடப்பதெல்லாம் தெரிகிறது, லதாவைப் பற்றி எப்படி பேசுகிறீர்கள்? அவள் என் மனைவி இல்லை” என்றான் கரன்.

“அங்கு நடப்பது எல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் லதா உங்கள் மனைவி என்று எனக்குத் தெரியும், இப்ப இல்லைன்னாலும் இனிமேல் அவங்கதான் உங்க மனைவி” என்றான் சுயம்பு.

என்ன செய்யவென்று திகைத்துப் போனவர்கள் திடீரென்று கணினியைப் பார்க்க அதில் சுயம்பு இணைப்பிலிருந்து விடுபட்டுவிட்டது தெரிந்தது,

கரனுக்கு உள்ளூர ஒரு பயம் தொக்கி நின்றாலும், என்ன செய்வதென்ற குழப்பம் மேலோங்கி இருந்தது. பாலா எதையும் கூற முடியாதவனாய் இருப்பினும் சுயம்பு சொல்வதைக் கேட்க வேண்டமென்ற முன்கூட்டிய முடிவோடு இருந்தான்.

“லதாவை என் மனைவிங்குறான், அதுக்காகவாவது அவன் சொல்றதை செஞ்சு, எப்படி லதாவை என் மனைவின்னு சொன்னான்னு கேட்கனுமே” என்றான் கரன்.

“உனக்கு அவ மேல ஆசை வந்துடுச்சு அதான் இப்படிப் பேசுற, இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம், நாம அவன் சொல்றதை செய்ய வேண்டாம்.” என்றான் பாலா. ஆனால் அதைக் கேட்கும் எண்ணத்தில் கரன் இல்லை.

அப்படி என்னதான் புதிர் போடுகிறானென்று பார்க்க ஆவலானான்.

“பாலா, நான் லதாவுடன் பேசப் போகிறேன் நாளைக்கு. எங்க வீட்டுல இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாங்கன்னு சொல்லிடுறேன்” என்றான் முடிவாக.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்